கிரெடிட் கார்டா ஓடு ஓடு .......
Thursday, October 15, 2009

கிரெடிட் கார்டு நிறுவனங்கள் தற்போது வேலைதேடும் இணையம் மூலம் பணம் செலுத்தாதவர்களை கண்டுபிடித்து தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளனர்.
மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வெலை செய்த நிதின் என்பவர் தற்போது நடந்த பொருளாதார சீர்குலைவில் தனது வேலையை இழந்துள்ளார், இதனால் வேறு வேலை தேடும் நோக்கத்தில் வேலைதேடும் இணையத்தில்(Job site) தனது Resume யை கொடுத்துள்ளார், கடந்த 7 மாதமாக இவர் ஒரு கிரெடிட் கார்டு நிறுவனத்தில் ரூ 6000/- பாக்கி வைத்துள்ளார், தனது வேலையை இழந்த பின்னர் தனது வீட்டை காலி செய்துவிட்டு வேறு முகவரியில் குடியேறிவிட்டார் மேலும் தனது தொலைபேசி எண்ணையும் மாற்றி விட்டார். கிரெடிட் கார்டு நிறுவனம் இவரின் பழைய முகவரி மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பயனில்லாமல் போகவே மற்றொரு முயற்சியாக வேலைதேடும் இணையத்தில் இவரை தேடியுள்ளனர், அதில் இவரின் பெயரில் உள்ள புதிய முகவரில் நேரடியாக சென்று விசாரணை செய்து தொல்லை கொடுக்க ஆரம்பிதுள்ளனர்.
இதைப்போல் மேனன் என்ற நபரை இமெயில் மூலம் மடக்கியுள்ளனர், இவருக்கு மூன்று நாள் மலேசியா சென்று வர இலவச பயண டிக்கெட் தருவதாக இமெயிலில் அனுப்பியுள்ளனர். இதை உண்மை என்று நம்பி அந்த இமெயில் உள்ள மொபைல் நம்பருக்கு தொடர்பு கொண்டுள்ளார் மேனன். அடுத்த அரைமணி நேரத்தில் அவரின் முகவரிக்கு சென்று விசாரணை செய்துள்ளனர்.
1 comments:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment